டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய தலைவர்கள் மீது வழக்குபதிவு

டெல்லி டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய சங்கத்தின் முக்கிய தலைவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய தலைவர்கள் மீது வழக்குபதிவு
Published on

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர்.

இதனால் தலைநகரில் பதற்றமான சூழல் உருவானது. டெல்லியில் நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 83 போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய சங்கத்தின் முக்கிய தலைவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 முதல்தகவல் அறிக்கை கிழக்கு மண்டலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த மோதலில் உயிரிழந்த விவசாயி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com