புதுச்சேரியில் ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

புதுச்சேரியில் ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரியில் ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு முதல் அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆய்வு பணிகளில் ஈடுபடும்பொழுது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அரசு பொறுப்பேற்காது என கூறினார்.

ஆனால், தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வேன் என கூறிய கிரண்பேடி, ஆய்வுக்கு செல்லும் முன் போலீசாரிடம் தகவல் தெரிவித்து விட்டு செல்கிறேன் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், பிள்ளையார்குப்பத்தில் ஆய்வு பணி மேற்கொள்ள சென்ற ஆளுநர் கிரண்பேடியை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றுள்ளனர்.

இலவச அரிசி உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு கிரண்பேடி தடையாக இருக்கிறார் என அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஆளுநரை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com