புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 402 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் 8,724 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 402 (4.61 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,684 ஆகவும், இறப்பு விகிதம் 1.50 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 528 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 834 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 4,497 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 5,331 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக 809 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 05 ஆயிரத்து 513 (93.77 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 11 லட்சத்து 64 ஆயிரத்து 795 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 3 லட்சத்து 21 ஆயிரத்து 911 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com