புல்வமா தாக்குதல்: பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று கூடுகிறது

புல்வமா தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று காலை கூடுகிறது.
புல்வமா தாக்குதல்: பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று கூடுகிறது
Published on

ஸ்ரீநகர்,

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது திடீர் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். இதற்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று காலை 9.15-க்கு கூடுகிறது

X

Daily Thanthi
www.dailythanthi.com