'கந்ததகுடி' பட சிறப்பு காட்சியை டி.வி.யில் பார்த்த புனித் ராஜ்குமாரின் ரசிகர் மாரடைப்பால் சாவு

‘கந்ததகுடி’ பட சிறப்பு காட்சியை டி.வி.யில் பார்த்த புனித் ராஜ்குமாரின் ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
'கந்ததகுடி' பட சிறப்பு காட்சியை டி.வி.யில் பார்த்த புனித் ராஜ்குமாரின் ரசிகர் மாரடைப்பால் சாவு
Published on

பெங்களூரு:

பெங்களூரு மல்லேசுவரத்தை சேர்ந்தவர் கிரிராஜ். இவர் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் புனித் நடிப்பில் வெளிவர உள்ள 'கந்ததகுடி' ஆவணபடத்தில் சிறப்பு காட்சி நிகழ்ச்சி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்தது. அதை வீட்டில் இருந்தபடி கிரிராஜ் டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், கிரிராஜை மீட்டு உடனடியாக மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கிரிராஜ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மல்லேசுவரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com