‘பரிதாப நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் உள்ளது’ - அமரிந்தர் சிங்

பரிதாப நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் உள்ளது என்று முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறினார்.
‘பரிதாப நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் உள்ளது’ - அமரிந்தர் சிங்
Published on

சண்டிகார்,

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங்கை, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத் விமர்சித்து இருந்தார். அமித்ஷாவை அமரிந்தர் சிங் சந்தித்ததை முன்வைத்து, அமரிந்தர் சிங்கின் மதசார்பற்ற தன்மையையும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் ராவத்தின் இந்த விமர்சனம் முட்டாள்தனமானது என அமரிந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார். பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி பரிதாப நிலையில் இருப்பதன் விளைவே ராவத்தின் இத்தகைய கருத்துகளுக்கு காரணமாக இருப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளா. இத்தனை ஆண்டுகளாக நான் விசுவாசமாக சேவை செய்த கட்சியில் இனிமேல் மரியாதையை எதிர்பார்க்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com