பஞ்சாப்: 8 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
பஞ்சாப்: 8 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது
Published on

சண்டிகர்,

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் பெரோஷ்பூர் மாவட்டம் ஹெட் ரஜோ கிராமத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 8 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், போதைப்பொருளை கடத்தி வந்த நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com