பஞ்சாப் மாநிலத்திற்கும் ஊடுருவியது ஒமைக்ரான் கொரோனா

பஞ்சாப் மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்திற்கும் ஊடுருவியது ஒமைக்ரான் கொரோனா
Published on

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இருந்து நாடு திரும்பிய நபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து மரபணு பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் துணை முதல் மந்திரி ஒ.பி சோனி ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com