பஞ்சாப்: கபடி வீரர் சந்தீப் சிங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் கைது

மேலும், கொலையில் தொடர்புடைய மூன்று வெளிநாட்டவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாபை சேர்ந்த சர்வதேச கபடி வீரரான சந்தீப் சிங், கடந்த மார் 14 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், கபடி வீரர் கொலையில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக விளங்கும் 3 வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com