புரட்டாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு


புரட்டாசி மாத பூஜை:  சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
x

புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலை,

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. வரும் 21-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

1 More update

Next Story