ரபேல் ஒப்பந்த விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுத்தாக்கல்

ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
ரபேல் ஒப்பந்த விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுத்தாக்கல்
Published on

புதுடெல்லி,

ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இதில், ரபேல் ஒப்பந்தத்தில் சந்தேகம் எதுவும் இல்லை எனக்கூறி அந்த மனுக்களை நீதிபதிகள் கூறினர். ஆனால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் நேற்று சீராய்வு மனுத்தாக்கல் செய்தார். மாநிலங்களவை உறுப்பினரான இவர் வக்கீல்கள் தீரஜ் குமார் சிங் மற்றும் மிரினல் குமார் மூலமாக இந்த மனுக்களை தாக்கல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com