கேரளாவில் 13-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி...!

ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரையை கேரளாவில் பயணிக்கிறது.
கேரளாவில் 13-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி...!
Published on

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள 'பாரத் ஜோடோ யாத்திரை' தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது.

இந்த நிலையில், இன்று 13வது நாளாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேத்தலா என்றப் பகுதியில் இருந்து காலை நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மீண்டும் 'பாரத் ஜோடோ யாத்திரை'யைத் தொடங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com