

புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய மூத்த பா.ஜ.க. தலைவர் மற்றும் மத்திய மந்திரியான கிரிராஜ் சிங், மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை கடுமையாக சாடினார்.
அவர் பாகிஸ்தான் மற்றும் சீனா போன்று நடந்து கொள்கிறார் என குற்றச்சாட்டாக கூறினார். ராகுல் காந்தி சீனாவிடம் இருந்து பணம் பெறுகிறாரா? என கேள்வி எழுப்பிய சிங், அதனை வைத்து கொண்டு நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கிறார் என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கிறார் என்று சிங் கூறினார்.