ராகுல்காந்தி பாதயாத்திரை எதிராளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பேட்டி

கேரளாவில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.
ராகுல்காந்தி பாதயாத்திரை எதிராளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பேட்டி
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். அவருடன் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ராகுல் காந்தியின் டி-சர்ட்டை ஆயுதமாக பயன்படுத்தி பா.ஜனதா கட்சியினர் அரசியல் செய்ய பார்க்கிறார்கள். பொதுமக்களை திசை திருப்ப, ராகுல் காந்தியின் உள்ளாடை குறித்தும் இனி புதிய சர்ச்சையை கிளப்புவார்கள்' என்றார்.

அகில இந்திய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறுகையில், பாதயாத்திரை நடத்தி வரும் ராகுல்காந்தி எதிராளிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார். அதனால் தான் அவர் அணிந்துள்ள டி-சர்ட்டின் விலை குறித்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com