கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு: மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே

கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு: மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரயில்வேக்கு ரூ.36,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சரக்கு ரயில்கள் தேசிய போக்குவரத்துக்கு உண்மையான வருவாய் உருவாக்கும் சாதனங்கள் என்றும் மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜல்னா ரயில் நிலையத்தின் பாலம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர், பயணிகள் ரயில் பிரிவு எப்போதும் நஷ்டத்தில் தான் செல்கிறது. டிக்கெட் கட்டணத்தை அதிகரிப்பது பயணிகளை பாதிக்கும் என்பதால், எங்களால் அவ்வாறு செய்ய முடியாது. கொரோனா பரவலின் போது, ரயில்வேக்கு ரூ .36,000 கோடி இழப்பு ஏற்பட்டது. சரக்கு ரயில்கள் மட்டுமே வருவாயை உருவாக்குகின்றன. கொரோனா பாதிப்பின் போது, சரக்கு ரயில்கள் பொருட்களை எடுத்துச் செல்வதிலும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தன. தற்போது கட்டுமானத்தில் உள்ள மும்பை-நாக்பூர் விரைவுச்சாலையில் புல்லட் ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று ராவ் சாகேப் தன்வே தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com