டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா உயர்வு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா உயர்வடைந்து 71.68 ஆக உள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா உயர்வு
Published on

மும்பை,

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.

டாலரின் தேவை கடுமையாக உயர்ந்ததால் அதன் மதிப்பும் அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், அதனை உடனடியாக கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு அண்மையில் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகின்றன. இதன்பலனாக நேற்று வர்த்தக நேர முடிவில், 51 காசுகள் உயர்ந்து 72.18 ஆக இருந்தது. இந்த நிலையில், இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் உயர்ந்து 71.68 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com