ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாரா? - எடியூரப்பாவுக்கு சித்தராமையா கேள்வி

ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாரா? என எடியூரப்பாவுக்கு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாரா? - எடியூரப்பாவுக்கு சித்தராமையா கேள்வி
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பதிலளித்தார். அப்போது எடியூரப்பா கூறியதாவது:-

எங்கள் அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறை கூறுகிறார். சட்டசபையில் மஸ்கி, பசவ கல்யாண் உள்பட 3 தொகுதிகள் மற்றும் பெலகாவி மக்களவை தொகுதி காலியாக உள்ளன. அந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. இதை நீங்கள் (சித்தராமையா) எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

அப்போது சித்தராமையா, "இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக நடைபெறுவது தான். நான் முதல்-மந்திரியாக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதே போல தான் இப்போது உங்கள் கட்சி வெற்றி பெறுகிறது. இடைத்தேர்தல்கள் எவ்வாறு நடக்கிறது என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். வேண்டுமானால் ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க நீங்கள் தயாரா?" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com