முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீருக்கு கொலை மிரட்டல்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி சார்பில் போட்டியிட்டு கிழக்கு டெல்லி தொகுதி எம்.பி. ஆனார். இந்தநிலையில் அவர் பாதுகாப்பு கேட்டு சதாரா மாவட்ட போலீஸ் துணை கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், எனது செல்போனுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே எனக்கும், எனது குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com