காஷ்மீரில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி உடல் மீட்பு

காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தப்பியோடிய பயங்கரவாதியின் உடலை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர்.
காஷ்மீரில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி உடல் மீட்பு
Published on

ஸ்ரீநகர்,

மத்திய காஷ்மீர் மாவட்டமான பட்காமில் உள்ள கவுசா பகுதியில் கடந்த 7-ந்தேதி அன்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து பயங்கரவாதி ஒருவன் தப்பியோடி விட்டான். அவனை பாதுகாப்பு படையினர் 4 நாட்களாக தேடினார்கள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஓடையில் அவன் பிணமாக மீட்கப்பட்டான். விசாரணையில் அவன் தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அக்லாரை சேர்ந்த அகிப் அகமது லோனே என்பதும், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. அங்கு கிடந்த பையில் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com