

புதுடெல்லி
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:-
* ரயில் நிலையங்கள், ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்
* 25,000 பேருக்கு அதிகமாக பயன்படுத்தும் அனைத்து ரயில் நிலையங்களிலும் எஸ்கலேட்டர்கள்
* ரயில்வே துறைக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு
* 4000 கி.மீ நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
* 600 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் .
* அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்
* 4000க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவர்; ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.
* பெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும்; 25,000 ரயில் நிலையங்களில் எக்ஸ்கலேட்டர் அமைக்கப்படும்
* பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்படும்
* 18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும்
* மும்பை மாநகர ரயில்வே வசதிகளுக்கு 11000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 17000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
#BJP | #UnionBudget | #Budget2018 | #IndianEconomy #Farmers | #Agriculture #Vegetables #ArunJaitley #Railway