2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த மாநில கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி அமைக்க வேண்டும்; அகாலிதளம் அழைப்பு

பஞ்சாப் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கிறது. அதையொட்டி, அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அகாலிதளத்தின் தலைவர் சுக்பிர்சிங் பாதல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த மாநில கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி அமைக்க வேண்டும்; அகாலிதளம் அழைப்பு
Published on

மாநில கட்சிகள்தான் மக்களின் பிரச்சினைகளை நன்றாக புரிந்துகொண்டவை. அதனால், மாநில கட்சிகள் ஒன்று சேருவது அவசியம். இதுதொடர்பாக பல்வேறு மாநில கட்சிகளுடன் பேசி வருகிறேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும். இந்த அணி, வலிமையான அணியாக உருவெடுக்கும் என்று நம்புகிறேன். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இப்போது நாடுதழுவிய கட்சியாக இல்லை. அதனால், இந்த அணிதான் பா.ஜனதாவுக்கு எதிரான 2-வது அணியாக இருக்கும். பா.ஜனதாவுடனான எங்களது பல வருட கூட்டணி நிரந்தரமாக முடிந்து விட்டது. என்ன நடந்தாலும், பஞ்சாபில் வேளாண் சட்டங்களை அமல்படுத்த விட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com