உறவுக்கார சிறுமி பலாத்காரம், கொலை; தடுக்க சென்ற பாட்டியும் பலாத்காரத்திற்கு ஆளான கொடூரம்... சகோதரர்கள் வெறிச்செயல்

உறவுக்கார டீன்-ஏஜ் சிறுமியை பலாத்காரம் செய்த சகோதரர்களை தடுக்க சென்ற பாட்டியும் பலாத்காரத்திற்கு ஆளான கொடூரம் நடந்துள்ளது.
உறவுக்கார சிறுமி பலாத்காரம், கொலை; தடுக்க சென்ற பாட்டியும் பலாத்காரத்திற்கு ஆளான கொடூரம்... சகோதரர்கள் வெறிச்செயல்
Published on

போபால்,

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் ரஞ்ஜி பகுதியில் சகோதரர்கள் இருவர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மாமாவின் மகளான 16 வயது சிறுமியை மும்பையில் இருந்து தங்களது ஊருக்கு கடந்த 13-ந்தேதி அழைத்து வந்துள்ளனர்.

சகோதரர்கள் இருவரும் சிறுமியை கூட்டாக, கொடூர முறையில் பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பின் சிறுமியை மிரட்டியதுடன், அடித்தும், உதைத்தும் உள்ளனர். இவர்களது அராஜக செயலை தடுக்க சிறுமியின் பாட்டி முன் வந்துள்ளார்.

இதில், சகோதரர்களில் ஒருவர் பாட்டியை அடித்து விரட்டி உள்ளார். மற்றொரு நபர் பாட்டியையும் விடாமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 19-ந்தேதி, காயமடைந்து இருந்த சிறுமியின் நிலைமை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி 20-ந்தேதி சிறுமி உயிரிழந்து விட்டார். பிரேத பரிசோதனை முடிந்து, சிறுமி புதைக்கப்பட்டார். இதன்பின்பு, சிறுமியின் தந்தை, சகோதரர்கள் மீது போலீசில் புகார் அளித்து உள்ளார்.

சிறுமியை பலாத்காரம் செய்து, படுகொலை செய்த விவரங்களை தெரிவித்து உள்ளார். இதன்பின்பு போலீசார் மீண்டும் சிறுமியின் உடலை வெளியே எடுத்து 2-வது முறையாக பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

அதன் அடிப்படையிலும், உறவினர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையிலும், இரு சகோதரர்கள் மீது வழக்கு பதிவானது. அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com