

திருமலை,
நவம்பர் மாதத்திற்கான பல்வேறு தரிசனங்கள் மற்றும் அறை ஒதுக்கீடு தொடர்பான கோட்டாவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஆன்லைனில் வெளியிட உள்ளது.
சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாதபத்மாராதனை சேவைகளுக்கான டிக்கெட் கோட்டா ஆகஸ்ட் 18 காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எலக்ட்ரானிக் டிப் முறையில் ஆகஸ்ட் 20 காலை 10 மணி வரை பதிவு செய்யலாம். டிக்கெட் கிடைத்தவர்கள் ஆகஸ்ட் 20 முதல் 22 மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோத்ஸவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, புஷ்பயாகம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 21 காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
விர்ச்சுவல் சேவைகள் மற்றும் அவற்றுக்கான தரிசன ஸ்லாட்டுகள் ஆகஸ்ட் 21 மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கபிரதட்சிண டோக்கன் கோட்டா காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால நோயாளிகளுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன் கோட்டா ஆகஸ்ட் 24 மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கோட்டா காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அறைகளுக்கான கோட்டா ஆகஸ்ட் 25 மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ஸ்ரீவாரி அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுக