நிர்மலா சீதாராமனுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு

கடந்த ஆகஸ்டு மாதம் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக மாற்றமின்றி நீடிக்கப்பட்டது.
நிர்மலா சீதாராமன்
Published on

ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். வரும் 5-ந் தேதி பணக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக மாற்றமின்றி நீடிக்கப்பட்டது. இதற்கிடையே, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக, அடுத்த மாதம் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வேண்டும் என்று ஸ்டேட் வங்கி ஆராய்ச்சி அறிக்கை பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com