மகாராஷ்டிராவில் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

மராட்டியத்தில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது.
மகாராஷ்டிராவில் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு
Published on


மும்பை,

மராட்டிய மாநிலம் நந்தூர்பர் மாவட்டம் சகாதா நகரில் இருந்து அவுரங்காபாத்துக்கு அரசு பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. துலே மாவட்டம் நிம்குல் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் 2 வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் 9 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்ததால் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. பலியானவர்களில் 2 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர். படுகாயம் அடைந்த 15 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com