லாரி மீது கார் மோதி கோர விபத்து - 4 பேர் பலி

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர்,
உத்தரபிரதேசத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தானின் பரன் மாவட்டம் கஜன்புரா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





