டெல்லி கோர்ட்டில் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு ராபர்ட் வதேரா மனு

டெல்லி கோர்ட்டில் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி கோர்ட்டில் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு ராபர்ட் வதேரா மனு
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது லண்டனில் நிலம் வாங்கியதில் முறைகேடான பணபரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று டெல்லி தனிக்கோர்ட்டு அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உள்ளது.

இந்நிலையில் ராபர்ட் வதேரா சார்பில் தனிக்கோர்ட்டில் அவரது வக்கீல் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ராபர்ட் வதேரா வருகிற 21-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை வர்த்தகம் தொடர்பாக ஸ்பெயின் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை 12-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com