சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழா ஏற்பாடுகளுக்கு ரூ.551 கோடி ஒதுக்கீடு

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழா ஏற்பாடுகளுக்கு ரூ.551 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழா ஏற்பாடுகளுக்கு ரூ.551 கோடி ஒதுக்கீடு
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை-மகர விளக்கு விழா நவம்பர் மாதம் மத்திய பகுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் வாரம் வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்கி உள்ளது.

இந்த பணிகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ரூ.551.5 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கேரளம் முதல்-மந்திரி சதீசன் தெரிவித்து உள்ளார். மாநில பொதுப்பணித்துறை மந்திரி பஷீர், சபரிமலையில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின் இந்த தொகையை அரசுக்கு பரிந்துரைத்தார்.

அதன்பேரில் இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி கூறினார். முன்னதாக, மண்டல பூஜை-மகர விளக்கு நிகழ்வுகள் சுமுகமாக நடைபெறுவதற்கு தேவசம்போர்டுடன் இணைந்து மாநில அரசு பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com