அரியானாவில் ஆம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்

அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி தெரிவித்துள்ளார்.
அரியானாவில் ஆம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்
Published on

சண்டிகார்,

அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது,

"மோட்டார் வாகனச் சட்டம் 194இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

மேலும், இந்த அவசரகால சேவை வாகனங்களுக்கு வழிவிடாத நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும்.

ஏற்கனவே, குருகிராம் போக்குவரத்து போலீசார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உறுப்புகளை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பசுமை வழித்தடங்களை அமைத்து தீவிர நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றி வருகின்றனர்."

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com