நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சகங்கள் மூடப்பட்டன

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சகங்கள் மூடப்பட்டன.
நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சகங்கள் மூடப்பட்டன
Published on

நாசிக்,

மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க இந்திய பாதுகாப்பு அச்சகம், கரன்சி நோட்டு அச்சகம் என 2 அச்சகங்கள் உள்ளன. இந்திய பாதுகாப்பு அச்சகத்தில், 1,900 ஊழியர்களும், கரன்சி நோட்டு அச்சகத்தில் 2 ஆயிரத்து 100 ஊழியர்களும் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த அச்சகங்கள் 31-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், அத்தியாவசிய பணி செய்பவர்கள் ஆகியோர் மட்டும் இந்த அச்சகங்களில் இருப்பார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com