ஊரடங்கில் ரஷ்ய காதலியுடன் லாரியில் மறைந்து சென்ற இந்திய வாலிபர்

ஊரடங்கின்போது திருமணம் செய்து கொள்ள ரஷ்ய காதலியுடன் லாரியில் மறைந்து சென்ற இந்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஊரடங்கில் ரஷ்ய காதலியுடன் லாரியில் மறைந்து சென்ற இந்திய வாலிபர்
Published on

சிம்லா,

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இமாசல பிரதேசத்தின் குல்லு நகரின் நிர்மந்த் பகுதியை சேர்ந்த 20 வயது கொண்ட வாலிபர் ஒருவர் 30 வயதுடைய ரஷ்ய பெண்ணுடன் காதலில் இருந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். எனினும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சோகி நகருக்கு செல்வதற்காக லாரி ஒன்றின் பின்புறம் மறைந்து கொண்டு பயணம் செய்துள்ளனர்.

ஆனால், வழியில் போலீசார் லாரியை சோதனையிட்டதில் அவர்கள் இருவரும் பிடிபட்டனர். நொய்டா நகரில் இருந்து வந்த அவர்களிடம், ஊரடங்கில் பயணம் செய்வதற்கான பாஸ் எதுவும் இல்லை. நிர்மந்த் பகுதியை அடைந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த விவரம் பற்றியும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதன்பின்பு ஊரடங்கில் சட்டவிரோத முறையில் சென்றதற்காக அவர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவானது. இதனை தொடர்ந்து தள்ளி பகுதியிலுள்ள மையம் ஒன்றில் ரஷ்ய பெண்ணையும், சோகி பகுதியில் உள்ள மையத்தில் மற்ற 3 பேரையும் போலீசார் தனிமைப்படுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com