ரஷிய நாடாளுமன்ற தேர்தலுக்காக கேரளாவில் வசிக்கும் ரஷியர்கள் ஓட்டு போட்டனர்

ரஷிய நாடாளுமன்ற தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, கேரளாவில் வசிக்கும் ரஷிய நாட்டு வாக்காளர்கள் நேற்று ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ரஷிய நாடாளுமன்ற தேர்தலுக்காக கேரளாவில் வசிக்கும் ரஷியர்கள் ஓட்டு போட்டனர்
Published on

அதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள ரஷிய துணை தூதரகத்தில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. காலை 11 மணி முதல் பகல் 2 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கேரளாவில், ரஷியாவை சேர்ந்த 25 வாக்காளர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் வாக்களித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com