சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு.. பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு அனுமதி


சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு.. பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு அனுமதி
x

இன்று அதிகாலை 5 மணி முதல் வழக்கமான வழிபாடுகளுடன், அனைத்து பூஜைகளும் நடைபெற்றது.

திருவனந்தபுரம்,

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை மாலை 5 மணிக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், நெய்யபிஷேகம், படி பூஜை உள்பட அனைத்து பூஜைகள் நடைபெற்றது. 5 நாள் நடைபெறும் சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 21-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

முன்னதாக 20-ந் தேதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பம்பையில் சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நடைபெற உள்ளது. அதனை அன்று காலை 10.30 மணிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.

அய்யப்ப பக்தர்கள் சங்கமம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-

அய்யப்ப பக்தர்கள் சங்கமத்திற்கான முன்பதிவு 15-ந் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் விண்ணப்பித்த 4,865 பேரில் முதலில் விண்ணப்பித்த 3 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர தென்மாநில மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் இந்த சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story