சபரிமலை வழக்கு கடந்து வந்த பாதை

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு குறிப்பிட்ட வயது பெண்கள் செல்ல விதிக்கப்பட்ட தடைக்காக பல்வேறு காலங்களில் வழக்குகள் நடைபெற்றன.
சபரிமலை வழக்கு கடந்து வந்த பாதை
Published on

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு குறிப்பிட்ட வயது பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்த வழக்கு கடந்துவந்த பாதை:-

* 1990 மகேந்திரன் என்பவர், சபரிமலை கோவிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கேரள கோர்ட்டில் வழக்கு.

* 1991 ஏப்ரல் 5-ல் கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு. பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று அறிவிப்பு.

* 2006 இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தடையை நீக்கக்கோரி வழக்கு.

* 2008 கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு பெண்களுக்கு தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு ஆதரவு தெரிவித்தது.

* 2008 மார்ச் 7-ல் சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது.

* 2016 ஜனவரி 11-ல் நீண்டகாலத்துக்கு பிறகு வழக்கு விசாரணைக்கு வந்தது.

* 2017 பிப்ரவரி 20-ல் வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

* 2018 ஜூலை 17-ந் தேதி 5 நீதிபதிகள் விசாரணை தொடக்கம்

* 2018 ஆகஸ்டு 1-ந் தேதி விசாரணை முடிந்து சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு கூறுவது நிறுத்திவைப்பு.

* 2018 செப்டம்பர் 28-ல் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் என தீர்ப்பு.

* இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கேரள அரசு தனது நிலையை 3 முறை மாற்றி உள்ளது. கம்யூனிஸ்டு அரசு பெண்களை அனுமதிக்கலாம் என்றும், காங்கிரஸ் அரசு அனுமதிக்க கூடாது என்றும் மனு தாக்கல் செய்தன.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com