

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் சியூர் அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவின்போது சப்பாத்தியும் அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் வழங்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவியது. இதுதொடர்பாக மாநில அரசு 2 ஆசிரியைகளை பணி இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், தலைமை செயலாளர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.