

புதுடெல்லி,
சென்ற முறை நடந்த நீட் தேர்வில் குளறுபடி இருந்தது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிற மாநிலத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள்கள் எளிமையாக இருந்தது எனவும் தமிழகத்தில் கடினமாக இருந்தது எனவும் கூறப்பட்டன.
இது தொடர்புடைய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து குளறுபடி இல்லாமல் தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. உறுதியளித்தது.
வருகிற 2018ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் கேட்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.