பீகார் முதல் மந்திரியாக சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்பு

பீகாரில் 21 ஆண்டு காலமாக முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்
பீகார் முதல் மந்திரியாக  சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்பு
Published on

21 ஆண்டுகளாக பீகார் முதல்-மந்திரியாக இருந்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக பணியாற்ற வேண்டும் என்ற தனது நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மார்ச் 30-ந் தேதியன்று பீகார் சட்ட மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் விலகினார். முன்னதாக, அவர் மார்ச் 17-ந் தேதியன்று நடைபெற்ற தேர்தலில், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார். சமீபத்தில் அவர் மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது முதல்-மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பீகார் மாநில கவர்னர் சையத் அட்டா ஹஸ்னைனை நேரில் சந்தித்த நிதிஷ் குமார் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பீகாரின் புதிய முதல்-மந்திரியாக சாம்ராட் சவுத்ரியை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து, சாம்ராட் சவுத்ரி இன்று (புதன்கிழமை) முதல்-மந்திரியாக பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பீகாரில் பா.ஜனதா முதன்முறையாக முதல்-மந்திரி பொறுப்பை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. பீகாரில் பா.ஜனதா சட்டமன்ற கட்சித் தலைவர் பொறுப்பை ஒப்படைத்ததற்காக பா.ஜனதா தலைமைக்கு சவுத்ரி நன்றி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com