தன்பாலின திருமண விவகாரம்: மறு ஆய்வு மனுவை 10 -ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு

தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்க முடியாது என்றும். அதற்கு நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
தன்பாலின திருமண விவகாரம்: மறு ஆய்வு மனுவை 10 -ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

ஆணும், ஆணும், பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கோரி, அத்தகைய தன்பாலின ஈர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு, தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்க முடியாது என்றும். அதற்கு நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில், வருகிற 10-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் இவ்வழக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com