கே.ஆர்.நகர் டவுனில் பள்ளி பஸ்-ஸ்கூட்டர் மோதல்; வாலிபர் சாவு

கே.ஆர்.நகர் டவுனில் பள்ளி பஸ்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
கே.ஆர்.நகர் டவுனில் பள்ளி பஸ்-ஸ்கூட்டர் மோதல்; வாலிபர் சாவு
Published on

மைசூரு:

மசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் அருகே ஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 35). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் வேலை விஷயமாக மைசூரு நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கே.ஆர்.நகர் டவுன் நீதிபதிகளின் பழைய குடியிருப்பு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த தனியார் பள்ளி பஸ்சும், அவருடைய ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சந்தோஷ், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.ஆர்.நகர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தங்களது மகன் இறந்து பற்றி அறிந்ததும், சந்தோசின் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் அவர்கள் தங்கள் மகனின் கண்களை தானம் செய்வதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து கே.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com