சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு 2-வது கட்ட பொதுத்தேர்வு மே 15-ந் தேதி தொடக்கம்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு 2-வது கட்ட பொதுத்தேர்வு மே 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

2026-ம் ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஆண்டுக்கு இரண்டு தடவை நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாதம் நடந்த முதலாவது தேர்வு, அனைவருக்கும் கட்டாயம் ஆகும். 2-வது பொதுத்தேர்வு மே மாதம் நடக்கும். விருப்பம் உள்ளவர்கள் மட்டும் எழுதலாம்.

தோல்வியடைந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட பாடத்தில் மதிப்பெண்ணை உயர்த்த விரும்புவர்கள் எழுதலாம். ஒரு மாணவர் 2-வது தேர்வில் 3 பாடங்கள் வரை எழுதி, எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அதை தக்க வைத்துக்கொள்ளலாம். இந்நிலையில், 10-ம் வகுப்புக்கான 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி தொடங்குவதாக சி.பி.எஸ்.இ. நேற்று அறிவித்தது. மே 21-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

இதன்படி மே 15, 2026 அன்று கணிதம் (Mathematics Standard மற்றும் Basic) பாடத்துடன் தேர்வுகள் தொடங்குகின்றன. மே 16ம் தேதியன்று ஆங்கில மொழிப் பாடங்களும், மே 18ம் தேதியன்று அறிவியல் பாடமும் நடைபெறுகிறது.

மே 19ம் தேதியன்று பல்வேறு மொழிகள், இல்ல அறிவியல், இந்துஸ்தானி இசை, சில்லறை வர்த்தகம் மற்றும் சுற்றுலா அறிமுகம் போன்ற பாடங்கள் நடைபெற உள்ளன.

மே 20ம் தேதியன்று ஓவியம், சமஸ்கிருதம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடங்களும், மே 21ம் தேதியன்று சமூக அறிவியல் பாடத்துடன் தேர்வு முடிவடைகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com