உஜ்ஜையினி மகாகாளி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

தெலுங்கானாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
உஜ்ஜையினி மகாகாளி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவில் இரண்டாவது நாளாகப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி 200 வருடப் பழமையான கோவிலும், சக்தி பீடங்களில் ஒன்றுமான செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜையினி மகாகாளி கோவிலுக்கு வருகை தந்தார். கோவில் சார்பில் சடங்கு பூஜைகள் நடத்தப்பட்டு, மகாகாளியின் புகைப்படத்தைப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

ஆஷாட மாதத்தில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கானோர் கோவிலில் குவிவது வழக்கம்.

ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்த பிரதமர் மோடி, மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி ஜி.கிஷன் ரெட்டியுடன் செகந்திராபாத் உள்ள உஜ்ஜையினி கோவிலுக்குச் சென்றார். பிரதமரின் வருகையையொட்டி கோவிலுக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

கோவிலுக்குச் சென்ற பிறகு, சங்கரெட்டி நகருக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு ரூ.6,800 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com