செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.48 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்

செப்டம்பர் மாதம் ரூ.1.48 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.48 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) ரூ.1,47,686 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

'செப்டம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,47,686 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,271 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.31,813 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.80,464 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.41,215 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,137 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.856 கோடி உட்பட) ஆகும்' என கூறப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 7-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com