மறைந்து இருந்து பெண்களை முத்தமிடும் 'சீரியல் கிஸ்ஸர்'

பீகாரில் வலம் வரும் 'சீரியல் கிஸ்ஸர்', ஜமுய்யில் சுகாதார ஊழியரை வலுக்கட்டாயமாக முத்தமிடும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
மறைந்து இருந்து பெண்களை முத்தமிடும் 'சீரியல் கிஸ்ஸர்'
Published on

பாட்னா

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை மர்ம மனிதன ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இதுகுறித்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் ஜாமுய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்த சம்பவம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவாளி மருத்துவமனை சுவர் ஏறி குதித்து உள்ளார். அந்த பெண் மொபில் போனில் பேசிக்கொண்டு வந்து உள்ளார். திடீர் என அந்த மனிதன் அவரை கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம்கொடுத்து உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அந்த மர்ம மனிதன் ஏன் மருத்துவமனை வளாகத்திற்குள் வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நபரை எனக்குத் தெரியாது. மருத்துவமனை ஊழியர்களை அழைத்தேன் அஆனால், அதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார்.எல்லைச் சுவர் மிகவும் குறுகியதாக உள்ளது.மருத்துவமனைக்கு அடிக்கடி வரும் பெண்களை முள்வேலி அமைத்து பாதுகாக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என கூறி உள்ளார்.

சீரியல் கில்லர் கேள்வி பட்டு இருப்போன் ஆனால் இவர் சீரியல் கிஸ்ஸர் இது போல் அடிக்கடி பெண்களுக்கு முத்தம் கொடுப்பதாக் புகார்கள் வந்து உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com