தேசிய தேர்வு முகமையில் வினாத்தாள் தயாரிப்பது யார்? - மக்களவையில் மத்திய மந்திரி விளக்கம்

தேசிய தேர்வு முகமையில் ஒப்பந்த பணியாளர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என்ற கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி பதில் அளித்தார்.
image courtesy: ANI
image courtesy: ANI
Published on

புதுடெல்லி,

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த நிலையில், நேற்று மக்களவை கேள்வி நேரத்தின்போது, தேசிய தேர்வு முகமையில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர்? என்று தி.மு.க. எம்.பி கனிமொழி கருணாநிதி கேட்டார். அதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுகந்த மஜும்தார் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

தேசிய தேர்வு முகமையின் தலைவர், மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். அங்கு தற்போது அயற்பணியில் 22 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 39 பேரும், வெளியில் இருந்து 132 பேரும் பணியாற்றுகிறார்கள். ஆனால் போட்டித்தேர்வுகளின் தீவிரத்தன்மையைகருத்தில்கொண்டு, வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட மையப்பணிகளை வெளிஊழியர்களுக்கு அளிப்பது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com