வளர்ந்த நாடுகள் தங்கள் நாடுகளில் ஐ.ஐ.டி.களை அமைக்க விரும்புகின்றன - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பல தங்கள் நாடுகளில் ஐ.ஐ.டி வளாகங்களை அமைக்க இந்திய அரசை அணுகி வருகின்றன என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
வளர்ந்த நாடுகள் தங்கள் நாடுகளில் ஐ.ஐ.டி.களை அமைக்க விரும்புகின்றன - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஐஐடி-யில் 23 ஐஐடிகள் இணைந்து நடத்தும் 2 நாள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது, " இந்த காலகட்டத்தில், கல்வி மற்றும் பிற அனைத்து நடவடிக்கைகளிலும் ஐஐடிகள் நம் நாட்டின் சிறந்த கோவிலாக உள்ளது. ஐஐடிகள் முயற்சியின் அனைத்து தரநிலைகளிலும் தங்களை நிரூபித்துள்ளன.

பல வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் தங்கள் நாடுகளில் ஐஐடி வளாகங்களை தங்கள் நாடுகளில் அமைக்க சொல்லுவது மிகவும் பெருமையாக உள்ளது. ஐஐடிகள் செய்த சோதனைகளின் அடிப்படையில் இந்தியாவின் அறிவுசார் திறன்கள் உலக அங்கீகாரத்தைப் பெறுவதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐஐடிகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பணிகளைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வை உருவாக்குவது, சிறந்த வளர்ச்சிக்காக மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் ஐஐடிகளுக்கு இடையேயான கூட்டு வழிகளை ஆராய்வது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

காலநிலை மாற்றம், நிலைத்தன்மை, ஸ்மார்ட் சிட்டி கட்டிடக்கலை, விவசாயம், ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள திட்டங்களை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com