கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

கணவருடன் சேர்த்து வைக்கிறோம் என கூறி ஓட்டலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
Published on

மீரட்,

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் வசித்து வரும் பெண்ணை அவரது கணவர் ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணை மீண்டும் திருமணம் செய்து கொள்ள அவர் நினைத்துள்ளார். இதனை பெண்ணிடம் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், அந்த திருமணம், சட்டப்பூர்வ முறையில் செல்லுபடியாவதற்கு உதவி செய்கிறோம் என சிலர் அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர். இதனை அந்த பெண்ணும் நம்பியுள்ளார்.

இதன்பின் மதபோதகர் உள்பட 3 பேர் அந்த பெண்ணை ஓட்டல் ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதன்பின் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தனது சகோதரரிடம் அந்த பெண் முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, ரியாசத் மற்றும் உமைத் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மதபோதகரான சர்ப்ராஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com