அக்டோபர் 7 ஆம் தேதி முதல் சீரடி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி - நிர்வாகம்

அக்டோபர் 7 ஆம் தேதி முதல் சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் முக்கிய அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து கட்டுபாடுகள் கடுமையாக்கப்பட்டன. தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்படி சில் முக்கிய கோவில்களும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது.

இந்நிலையில் மராட்டிய மாநிலம் சீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவதாகவும் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகளுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7ம் தேதி முதல் 5 ஆயிரம் ரூபாய் கட்டண பாஸ்களும் திறக்கப்படுகின்றன. பக்தர்கள் தங்களின் வசதிக்கேற்ப ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரு வழிகளிலும் இந்த டோக்கனை பெற்று தரிசனம் செய்யலாம். புதிய முடிவின்படி, ஒரே நேரத்தில் ஆயிரத்து 150 பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், ஆர்த்தியில் 90 பக்தர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், நுழைவு வாயில் இரண்டில் மட்டுமே கோவிலுக்குள் வர வேண்டும். வெளியேறும் பக்தர்கள் 4 மற்றும் 5 வது வாயில்கள் வழியாக கோவிலில் இருந்து வெளியேறலாம். தியான மண்டபம், பராயான் காஷ் ஆகிய மண்டபங்கள் மூடப்பட்டிருக்கும். பக்தர்கள் தங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com