கணவர் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் தற்கொலை

ராமநகர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கணவர் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் தற்கொலை
Published on

ராமநகர்:

ராமநகர் அருகே அரலிமரதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் நவ்யா (வயது 23). இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நவ்யா, சிவராஜ் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக நேற்று முன்தினம் சிவராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவராஜ் இறந்த அதிர்ச்சியில் இருந்த நவ்யா நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவங்கள் குறித்து ராமநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com