தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர், துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

கலபுரகியில், தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர், துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர், துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
Published on

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் சவுக் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் கும்பாரா(வயது 30), தொழிலாளி. நேற்று முன்தினம் பிரசாந்த் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சவுக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பிரசாந்தை, அதே கிராமத்தை சோந்த மஞ்சுநாத், முன்விரோதத்தில் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மஞ்சுநாத்தை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினார்கள். நேற்று மாலையில் சவுக் அருகே உள்ள தோட்டத்தில் அவர் பதுங்கி இருப்பது தெரிந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீஸ்காரர் சித்தராமையா சுவாமியை ஆயுதத்தால் தாக்கிவிட்டு மஞ்சுநாத் தப்பி ஓட முயன்றார். இதையடுத்து, மஞ்சுநாத்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். படுகாயம் அடைந்த போலீஸ்காரர் சித்தராமையா சுவாமி, மஞ்சுநாத் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சவுக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com