ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சித்தராமையாவின் மனைவி வீடு திரும்பினார்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சித்தராமையாவின் மனைவி வீடு திரும்பினார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சித்தராமையாவின் மனைவி வீடு திரும்பினார்
Published on

பெங்களூரு:

முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதி(வயது 75) ஆவார். இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. லேசான காய்ச்சல், உடல்சோர்வு போன்றவை அவருக்கு ஏற்பட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி, குணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி நேற்று ஆஸ்பத்திரியில் வீடு திரும்பினார். தற்போது அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com